அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு பையில் இருக்கும் பணத்தை எடு என்று கூறியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறித்துதுக் கொண்டு இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்த இருவரும் மயக்க நிலையில் அங்கேயே கிடந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
காவலர்கள் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு இளைஞர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் உண்மையில் காவலர்களா ? அல்லது காவல்துறையினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியா ?
அதிரை காவல் துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.