சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிவாரணம் பெறுவதற்கு நாளை(ஜூலை 3) விண்ணப்பம் பெறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 த்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.இந்த நிவாரணம் பெறுவதற்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே பட்டியலில் இருக்கிறது.
எனவே நம்முடைய ஊராட்சிக்குட்பட்ட மல்லிப்பட்டிணம், ராமர்கோவில் தெரு,சின்னமனை ஆகிய இடங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அட்டை வைத்திருக்கும் அனைவரையும் மாற்றுத்திறனாளி மாவட்ட பட்டியலில் இணைத்து அவர்களுக்கும் உதவித்தொகை வாங்கி கொடுத்திட வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்:-
1.மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் ( மூன்று பக்கம்)
2.ஆதார் அட்டை நகல் – 1
3.குடும்ப அட்டை -1
4.வங்கி கணக்கு நகல்- 1
5.வாக்காளர் அடையாள அட்டை நகல் -1( 18 வயதிற்கு மேற்பட்டவர்கள)
இடம் : யாக்கூப் கம்யூனிகேசன்
நாள்:- 03.07.2020, காலை 10 மணி முதல்
மேலதிக தகவல்களுக்கு:-9500435245,9444877708