Sunday, February 1, 2026

அதிரையில் கனமழை : குடிசைகளை சூழ்ந்த மழைநீர் – களப்பணியில் SDPI !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கூட இம்மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து உள்ளதால் மக்கள் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியினை SDPI கட்சியினர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், போர்வை உள்ளடக்கிய கிட் வழங்கப்பட்டு அவர்களின் தேவைகளை SDPI கட்சியினர் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை SDPI கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி மற்றும் SDPI கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img