Wednesday, May 8, 2024

அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே அதிகாரிகள்!!

Share post:

Date:

- Advertisement -

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு வரைறை சம்பந்தமாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி இரகசியமாக நடத்தப்பட்டதோடு, விடுமுறை நாளான நேற்று நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வார்டு வரையறை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் மெளனம் காத்துவிட்டு தற்போது அவசர கதியில் இன்று (20.12.2021) காலை திருச்சியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என இன்றைய செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டிருப்பதும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததை காட்டுகிறது.

இது முற்றிலும் மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமான செயலாகும்.

ஆகவே இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள கூட்டத்தை வேறு தேதியில் தஞ்சாவூரில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...