தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் ஊர்களில் அதிரையும் ஒன்று. இங்கு அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வரை இஸ்லாமியர் பேரூர்மன்ற தலைவராகவும், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் துணை தலைவராகவும் வருவது வழக்கமான மரபு. ஆனால் அதிரை, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு மறுவரையரை செய்யப்பட்டதில் மக்கள் தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கையை 21ல் இருந்து 33ஆக நிர்ணயிக்காமல் மொத்தமே 27ஆக குறைத்துவிட்டனர். இப்போதைக்கு அதிரையின் எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் அதிரை நகராட்சியுடன் இணைக்கப்படும். அப்போது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அரசியல் பிரதிநிதிதுவத்தில் (வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில்) சிறுபான்மை என்ற நிலையை அடைந்துவிடுவர். இதனை தற்போதே சரி செய்து உடனடியாக இஸ்லாமியர்களுகான உரிய பிரதிநிதிதுவத்தை பெற்றாக வேண்டும். அதிரையில் உள்ள 7 ஜமாத்களும் ஓரணியில் திரண்டு சட்ட போராட்டம் நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்ய தவறினால் எதிர்கால சந்ததிகள் அரசியல் பிரதிநிதிதுவத்தை இழந்த அகதிகள் ஆகிவிடுவர். இதனால் முன்னோர்களை அவர்கள் வசைபாட கூடும்.
20 ஆண்டுகளில் அதிரையில் பெரும்பான்மையை இழக்கபோகும் இஸ்லாமியர்கள்! 7 ஜமாத்களும் தெளிவாக செயல்படாவிட்டால் சரிவு நிச்சயம்!!
More like this

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...





