Monday, April 29, 2024

அதிரையில் மத பிரச்சனையை உருவாக்க முயலும் விஷமிகளை கைது செய்க -முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகரில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய வகையில் பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி போஸ்டர்களை அதிரை நகரில் ஒட்டியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மணிச்சுடர் சாகுல் ஹமீதும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், அதிரையில் மதவாத சக்திகள் ஒரு போதும் கால் பதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிரை மக்கள் அனைவரும் ஒற்றுமையை மட்டுமே விரும்புவதாக சுட்டிக் காட்டியிருக்கும் சாகுல் ஹமீது, பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...