Monday, May 6, 2024

அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(வண்டி எண் : 06035,06036) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் புறப்பட்டு வேளாங்கண்ணி வந்து சேரும் (வண்டி எண் 06035)

வேளாங்கண்ணி – எர்ணாகுளம்

மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்று சேரும்(வண்டி எண் 06036)

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்துள்ள நிலையில், இதனை நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்பதே தமிழகம் மற்றும் கேரள ரயில் பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...