Thursday, March 19, 2026

அதிரைக்கான மெகா திட்டங்கள்! அமைச்சருக்கு முன்னாள் சேர்மன் கடிதம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 2011ம் ஆண்டு அதிரை பேரூர் மன்ற பெருந்தலைவராக மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததை குறிப்பிட்ட எஸ்.எச்.அஸ்லம், அதனால் அன்றைய அதிமுக அரசு அதிரைக்கான வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போட்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிரையில் 60% பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டிய அவர், அதிரையில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் விபத்து மற்றும் காற்று மாசுக்கு காரணமான அதிரை சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல்களை அகற்ற அதிரை நகராட்சிக்கு நவீன இயந்திரம் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் நேருவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் எஸ்.எச்.அஸ்லம் குறிப்பிட்டுள்ளார். இவர் வலியுறுத்தும் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அதிரையின் எதிர்காலம் ஒளிரும் என்பதில் மாற்று கருத்தில்லை.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img