Wednesday, May 1, 2024

உருவானது அதிரை பத்திரிகை பாதுகாப்பு கவுன்சில்!!

Share post:

Date:

- Advertisement -

பத்திரிகை துறைக்கும் அதிரைக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிரையில் இணைய ஊடகங்கள் தொடங்கி செயல்பட்டன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் அதிரையில் தொடங்கப்பட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் பொருளாதார நோக்கமின்றி மக்கள் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு சுயநலனின்றி பொதுநலனுக்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் இணைய ஊடகங்களும் அதன் ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும் பல்வேறு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். நியாயமான விசயங்களுக்கு குரல் கொடுத்ததற்காக அதை எழுதியவரையும் அவர்களின் குடும்பத்தினரையும் சமூக புறக்கணிப்பு செய்யும் அவலமும் தொடர்கிறது. தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

இப்படி பல்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களின் நலன் கருதி ADIRAI PRESS PROTECTION COUNCIL என்ற பெயரில் பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அதிரையின் முன்னணி இணைய ஊடகங்களான அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆஃப் அதிரை, அதிரை இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்கள் இணைந்து இந்த சங்கத்தை தொடங்கியுள்ளார்கள். மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களின் உரிமை குரலாக நமது சங்கம் நிச்சயம் செயல்படும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...