Friday, March 13, 2026

ஏரிப்புறக்கரை ஊராட்சியை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்-அனுமதிகோரி காவல் நிலையத்தில் மனு!

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிப்புரக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் அகமது அஸ்லம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : MSM நகர், KSA லைன் பகுதி ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்ததாகும். அந்த குடியிருப்பு பகுதியில் குப்பை கூளங்களை சரிவர அகற்றுவது இல்லை. சாக்கடை கழிவுநீர், மழை நீர் அந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவரிடமும், வார்டு உறுப்பினரிடமும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே ஐயா அவர்கள் சமூகம் எதிர்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 24.05.24 அன்று காலை 11 மணிக்கு கஸ்டம்ஸ் ரோடு, காலேஜ் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...
spot_imgspot_imgspot_imgspot_img