Wednesday, March 18, 2026

தொடரும் தெரு நாய்களின் தொல்லை : அலட்சியத்தில் அதிரை நகராட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய வீதிகளில் கூட்டமாக உலாவித் திரியும் இந்த தெரு நாய்களின் தாக்குதல் தொல்லையால் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள் வெளியே சென்று வர மிகவும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். 

மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் சிறுவர் சிறுமிகளை தெருவில் உலா வரும் நாய்கள் சுற்றி வளைத்து தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து ஒரு சில பொதுமக்கள் பலமுறை நகராட்சிக்கு நேரில் சென்று எடுத்து கூறியும் நகராட்சி நிர்வாகத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் அதிரை, பேரூராட்சியாக இருந்த போது இது போன்ற நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது கண்டறிந்து சரி செய்து வந்த நிலையில், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் இது போன்ற அடிப்படை நடவடிக்கைகளில் அதிரை நகராட்சி மெத்தனப்போக்கை கையாள்வது முகசுளிப்பை ஏற்படுத்துவதாக அதிரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img