அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் போட்டி முக்கிய சுற்றுகளை எட்டி வரும் நிலையில், இன்று இத்தொடரின் 24 போட்டியில் கோயம்புத்தூர் (கரம்பயம்) – அதிரை ROYAL FC அணிகள் மோதினர்.
இப்போட்டியில் வென்றால் காலிறுதியில் நுழைந்து விடலாம் என்கிற உத்வேகத்துடன் களம் கண்ட அதிரை ROYAL FC அணிக்கு ஏற்றார் போல கோவை கரம்பயம் அணியும் தங்களது ஆட்டதிறன்களை அவ்வப்போது மாற்றி அமைத்ததன் பலனாக கோவை கரம்பயம் அணி முதல் கோலை பதிவு செய்து முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட அதிரை ROYAL FC அணியின் கூட்டு முயற்சியின் விளைவாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது முதல் கோலை பதிவு செய்து 1 – 1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்த ஆறுதல் அடைவதற்குள், கோவை கரம்பயம் அணியும் அடுத்தடுத்து 2 கோல் அடித்து 3 – 1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று அதிரை ROYAL FC அணியின் காலிறுதி கனவை கலைத்தது.








