Wednesday, March 18, 2026

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி திறப்பு விழா கண்டு 15 ஆண்டுகள் நிறைவு, 14 ஆண்டுகளாக முஹல்லா நிர்வாகத்தில் திறம்பட செயலாற்றி வழிநடத்தி வந்த ஜமாஅத் தலைவர் V.M.A. அஹமது ஹாஜாவை கவுரவிக்கும் விதமாகவும், கடந்த கல்வியாண்டில் முஹல்லாவில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ/மாணவிகளை ஊக்குவிக்கும் விழா என முப்பெரும் விழா நேற்று 02/072025 புதன்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் புதிதாக கட்டப்பட்ட கடற்கரைத்தெரு ஜூமுஆ மஸ்ஜித் திறப்பு விழா கண்டு 15 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், பள்ளியின் திறப்பு விழா குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சுதந்திர போராட்ட தியாகி மர்ஹூம். M.A.C. புஹாரி அவர்களின் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி நீண்ட காலமாக தலைவராக முஹல்லாவை சிறப்பாக வழிநடத்தி வந்த ஜனாப். V.M.A. அஹமது ஹாஜா அவர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் முஹல்லாவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த முப்பெரும் விழாவில் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.

படங்கள் :

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img