Friday, March 13, 2026

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின் தவறான கொள்கைகள், தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு (LPG) விலை, மேலும் பல இடங்களில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டம் 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற உள்ளது. இதில் திமுக மேற்கு கழக நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img