Wednesday, March 18, 2026

தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்.

பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து பரிசுகளை திரும்பப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், அவற்றை பள்ளிக்கு வந்த பின் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெற்றோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img