10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்அ
ப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது
தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் முறை ரூ.9 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும்.
மதிப்பெண் சான்றிதழ் கிழிந்துவிடாமல் இருக்கும் வகையில் வரும் ஆண்டிலிருந்து கிழியாதபடா காகிதத்தில் சான்றிதழ் வழங்கப்படும்
10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு !!!
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...
அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...





