Monday, December 1, 2025

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த என்பவர் தனது கைபையை காவல் துறையினரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது கைபையை சோதனை செய்த போது அதில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரனையில் பையில் இருந்தவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரியவந்தது.

மேலும் காடாக சாலையில் வேளாண்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கள்ள நோட்டுக்களை அச்சடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கோவை மத்திய பிரிவு காவல் துறையினர் 1 கோடியே 20 லட்சம் அளவிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஆகும். மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயண்படுத்திய கணினி, பிரிண்டர், கட்டிங் இயந்திரம் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆனந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளி 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img