Monday, December 1, 2025

அதிரை பெண்களே உஷார்..!

spot_imgspot_imgspot_imgspot_img

ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான்.

இவனிடம் உதவி கேட்க்கும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து. பெண்களின் செல்போனில் திருட்டுத்தனமாக APP ஒன்றை தரவிரக்கம் (Download) செய்துள்ளான். இதன் மூலம் அந்த பெண்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான போட்டடோ, வீடியோ, மெஸ்ஸேஜ்கள் போன்ற தகவல்களை திருட்டு தனமாக தன் கைபேசி, லேப்டாபில் தரவிரக்கம் செய்து அந்த புகைப்படங்களை வைத்து தவறான காரியங்களின் ஈடுபடுத்த வற்புறுத்தி உள்ளான்.

இவனுக்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அந்த புகைப்படங்கள்/வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து விடுவேன் என அச்சுறுத்தியுள்ளான்.

இது போல ஒரு பெண்ணை வற்புறுத்தியதும் அந்த பெண் திட்டம் போட்டு. இந்த கொடியவனை சிக்க வைத்தார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது செய்தி இது எங்கேயோ நடக்கிறது என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். நமதூரிலும் நடக்கலாம் விழித்து கொள்ளுங்கள்.

உங்களின் கைபேசியை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள். இது நாம் பயமுறுத்த சொல்லுவது கிடையாது. இது உங்களின் பாதுகாப்பிற்காக கூறுகிறோம்.

அன்றாட நீங்கள் பயன்படுத்தும் Appகளை தவிர வேறு எந்த App ஐ யும் உங்கள் கைபேசியில் வைக்க வேண்டாம். நீங்கள் download செய்யாத App ஏதேனும் உங்கள் கைபேசியில் இருந்தாலும் அல்லது சந்தேகத்திற்குரிய App ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனே அழித்து விடவும்.

உங்கள் கைபேசியில் Settings –> App (Application) சென்று நீங்கள் பயன்படுத்தாத /சந்தேகத்திற்குள்ளான App ஏதேனும் இருந்தால் அதனை Uninstall செய்து விடுங்கள்.

தேவையற்ற App களை கைபேசியில் வைத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்த கூடும்.

ஆகவே, வெள்ளம் வரும் முன் அனை போடுவது சாலச் சிறந்தது என்பதனை விளங்குங்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img