Monday, December 1, 2025

காலமானார் கலைஞர் : கண்ணீரில் கரையும் தமிழகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2016 ம் ஆண்டு முதல் உடல் உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையுடன் ஓய்வும் எடுத்து வந்தார்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை சுவாசம் பொருந்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு உடல் அவருக்கு நலிவுற்று ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரக தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது.

இதனால் 27 ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

11 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சையில் இருந்து வந்த கலைஞர் உடல்நிலையில் அவ்வப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இருப்பினும் நேற்று மாலை 6.30 மணியளவில் கலைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியானது.

இந்த மருத்துவ அறிக்கையில் அவருடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பதில் மருத்துவர்களுக்கு சவாலாகவே உள்ளதாகவும் மேலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் உடல்நிலை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டுமொரு மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கலைஞரின் உடல்நிலை கடந்த சில மணி நேரங்களாகவே கவலைக்கிடமுடன் உள்ளதாக குறிப்பிட பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தீவிர சிக்கிச்சை கண்காணிப்பு பிரிவில் இருந்த திமுகவின் முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

இச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர் காவேரி மருத்துவமனை முன் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

இதனால் சென்னை மாநகரம் முழுதும் பெரும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img