Thursday, March 19, 2026

அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.

நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது.

அதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு அவரின் உடலை மீட்டனர் அப்பொழுது அவரது சட்டையில் தொலைபேசி இருந்தது. அதிலிருந்து இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்தவரின் ஊர் செட்டியகாடு (திருத்துறைப்பூண்டி) தகவலறிந்து அவரது மனைவி நம்ப மறுத்தார். அதன் பிறகு வாட்ஸாப் மூலம் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

பிறகு இறந்தவரின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்று உதவி செய்த ரகு, சசி, ஸ்ரீ ராம் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img