Saturday, September 13, 2025

திருச்சியில் மர்மமான முறையில் இறந்த 31 மான்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில் கடந்த இரண்டு தினங்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளன. தகவலறிந்து அங்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் சில மான்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து அருகம்புல், கீரை, காய்கறி ஆகியவற்றை மிளகுடன் சேர்த்து மருந்தாக கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சுபா எனும் புல் வகை தீவனத்தை மான்கள் அதிகமாக உட்கொண்டதால் செரிமானம் ஆகாமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img