Sunday, April 28, 2024

திருச்சியில் மர்மமான முறையில் இறந்த 31 மான்கள்!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில் கடந்த இரண்டு தினங்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளன. தகவலறிந்து அங்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் சில மான்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து அருகம்புல், கீரை, காய்கறி ஆகியவற்றை மிளகுடன் சேர்த்து மருந்தாக கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சுபா எனும் புல் வகை தீவனத்தை மான்கள் அதிகமாக உட்கொண்டதால் செரிமானம் ஆகாமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...