Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணத்தை வஞ்சிக்கும் ஊராட்சி நிர்வாகம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மற்றும ஆண்டிக்காடு  ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு மற்றும் காசிம் அப்பா தெரு பகுதிகளில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வடக்கு தெரு,காசிம் அப்பா தெரு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டான பகுதியாக காட்சி தருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.மேலும் இப்பகுதிகளுக்கு தண்ணீர் குழாய்கள் இருந்தும் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது என்றும், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குப்பைகள் கொட்டுவதற்கென எந்தவொரு குப்பை தொட்ட வசதியும் இல்லாததால் பொதுமக்கள் வீதியிலே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடுகள் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்த போதும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்தே வருகின்றனர், அடிப்படை வசதிகளை இப்பகுதிகளுக்கு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img