கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினரை அழைத்து எச்சரித்த காவல்துறையினர், இளங்கோவினை விடுவித்தனர். மேலும் தேவாலயத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளை இளங்கோவின் குடுபத்தினர் சரி செய்து தரவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...