Monday, December 1, 2025

போலீசாருக்கு எச்சரிக்கை! லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவல் துறையில் பணியாற்றும் போலீசார் யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பில் தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மாமூலாக பணம் பெறுவது பொதுமக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் போலீசார், ஊரக பகுதிகளில் பணியாற்றும் போலீசார் எல்லா இடங்களிலும் லஞ்சம் பெறுகின்றனர். மார்க்கெட், கடைகள், உணவகங்கள் என பல்வேறு இடங்களில் இருந்தும் போலீசார் பரிசுப்பொருட்கள், அன்பளிப்புகளை பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோதமாக பணம், மாமூல் பெறுவது ஊழல் தடுப்பு சட்டம் 1988 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். போலீசார் லஞ்சம், மாமூல் வாங்குவது தெரியவந்தாலோ, கண்டறியப்பட்டாலோ, அது தொடர்பான ஆவணங்கள் கைபற்றப்பட்டாலோ லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதை தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக காவல் துறையில் உள்ள அதிகாரிகள் விதிகளை முறையாக பின்பற்றி, திடீர் சோதனை நடத்தி, சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img