Monday, December 1, 2025

அதிரையில் அப்பாவி இளைஞர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேதுரோட்டில் உள்ள பிரபல பாரி மளிகையில் பணிபுரியும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

நாகுடியை சேர்ந்த மஸ்தான் கனி என்பவர் பாரி மளிகை கடையில் பணி புரிந்து வருகிறார்.அவர் நேற்று(30.8.2019) இரவு கடையில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது கரையூர் தெருவை சார்ந்த திருப்பதி,ஹரிஹரன் மற்றும் விக்கி ஆகியோர் கடையினுள் சென்று மஸ்தான் கனி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும்,அவர் சார்ந்த மதத்தை இழிவுப்படுத்தியும் கொச்சையான வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மஸ்தான் கனியுடன் SDPI கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாம் சென்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மஸ்தான் கனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img