Saturday, September 13, 2025

CAA மற்றும் NRC க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர் பி. ஜைனுல் ஆஃப்தீன் அறிவிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மதத்தின் பெயரால் மக்களை கூறுபோடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும்,, அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட NRC என்னும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் நடத்த இருப்பதாக பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. வின் அறிவிப்புக்கு எதிராகவும்,

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு வலிமையான போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றது.

பெரும்பான்மை பலம் என்ற ஆணவத்தில் இருந்த மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் சிலரும் எதிர்ப்பின் வலிமையை உணர்ந்த பின், சுருதி குறைந்து பேசி வருவதை நாட்டு மக்கள் கண்டு வருகிறார்கள்.

ஆனால், மத்திய அரசுக்கு எதிராக போராடும் அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் உட்பட அனைத்து சமூக மக்களும் வைக்கும் கோரிக்கை CAA மற்றும் NRC ஐ திரும்பப்பெற வேண்டும் என்பது தான்.

இத்தனை வலிமையான களப் போராட்டத்தை கண்டும், கோரிக்கையை ஏற்க மோடி அரசு தயாராக இல்லை. போராட்ட வலிமையை குறைப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களையும், முரண்பாடான கருத்துக்களையும் பேசி வருகிறார்கள்.

NRC நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் முதல் பலி முஸ்லிம்கள்; தமிழகத்தில் முஸ்லிம்களுடன் சேர்ந்து இந்துக்களும் பலியாவார்கள்.

இந்திய குடிமக்கள் – குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் நிலையில்

மேலும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான இந்து மற்றும் கிறித்தவ சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எங்களின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக எங்களோடு கரம் கோர்க்க வேண்டும் என்று அன்பான அழைப்பை விடுக்கிறோம்.
என்று தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img