Saturday, September 13, 2025

அதிரையில் காட்டுத்தீயாக பரவி வரும் ஆடியோ – நம்ப வேண்டாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மேலதெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இன்று இரவு 7 மணியளவில் யாரோ ஏறிச்சென்று ஏதோ மருந்தை கலந்ததாகவும், அதனால் நாளை யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் அருந்த வேண்டாம் என்றும் அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதுகுறித்து விசாரித்ததில், இன்று இரவு 7 மணியளவில் 4 சிறுவர்கள் டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏரியுள்ளனர்.

அந்த குறிப்பிட்ட சிறுவர்களை அழைத்து மேலத்தெருவாசிகள் விசாரித்ததில், அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆகையால் அதிரையில் தற்போது காட்டுத்தீ போல பரவி வரும் அந்த ஆடியோ பதிவை நம்ப வேண்டாம் என்றும், யாரும் பிறருக்கு பகிர வேண்டாம் எனவும் மேலத்தெரு தாஜுல் இளைஞர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img