Wednesday, December 3, 2025

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு சார்பில் வழங்கல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரர்களுக்கு பேரூராட்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தன்னார்வலர்கள் அரசோடு இணைந்து பணியாற்றலாம் என்று அறிவித்து இருந்தது, அதனடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10000க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் பதிவு செய்து இருக்கிறார்கள்.இதில் அதிரையை சேர்ந்த 25 பேர் பதிவு செய்து இருந்தனர்.

அதனையடுத்து, பதிவு செய்திருந்த அனைவருக்கும் அரசின் அடையாள அட்டைகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு வழங்கினார். அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், வழக்கறிஞர் முகமது தம்பி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் முகமது ஜாவித் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் அதிரை மக்களின் தேவைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img