சென்னை, கோட்டையில் பறந்த
தேசியக் கொடியில், ஓட்டை விழுந்ததைத்
தொடர்ந்து, அந்தக் கொடி
அகற்றப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை
கொத்தளத்தில், மிகப்பெரிய
கொடிக்கம்பம் உள்ளது. இந்த
கொடிக் கம்பத்தில், தினமும் ராணுவ
வீரர்கள், காலையில், தேசியக் கொடியை
ஏற்றுவர்; மாலை இறக்குவர். வழக்கம் போல், நேற்று
(அக்.,20) காலை, தேசியக் கொடியை ஏற்றினர்.
காலை, 11:00 மணி அளவில், தேசியக்
கொடியின் பச்சை நிறத்தில், ஓட்டை இருப்பதை,
அவ்வழியே சென்றவர்கள் கண்டனர்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
பிற்பகல், 2:15 மணிக்கு, ராணுவ வீரர்கள், ஓட்டை
விழுந்த தேசியக் கொடியை கீழே இறக்கி, புதிய
தேசியக் கொடியை பறக்க விட்டனர். பட்டாசு
நெருப்பு காரணமாக, கொடியில்
ஓட்டை விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...





