தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை உள்ளடக்கிய சேர்மன்வாடி,புதுமனைத்தெரு,செக்கடிப்பள்ளி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சாலைகள் குண்டுகுழியுமாக இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இந்த சாலை பல தெருப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் பகுதியாகும்.நான்கைந்து தெருக்களை சார்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர்.மேலும் சென்னை செல்வதற்கான பல ஆம்னி பஸ்களின் அலுவலகங்கள் இங்கு தான் செயல்படுகின்றன.அதனால் இந்த பகுதிகள் பரபரப்பாகவே காணப்படும்.இதற்கான நிரந்தர நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்தகாலங்களில் போடப்பட்ட சாலைகள் போல் அல்லாமல் உடனடியாக தரமான சாலையை இப்பகுதிகளில் உடனடியாக அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்???


More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





