Saturday, September 13, 2025

அதிரை : பொறுப்பற்ற மின்வாரியத்தால் பொதுமக்கள் அவதி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நள்ளிரவு கடந்துவிட்டால் மின்சார வாரிய அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை யாரையும் இலகுவாக தொடர்பு கொள்ளவே இயலாத அளவுக்கு ஃபுல் டைட்.

04373 242444 என்ற தரைவழி தொடர்பு எண்ணும் தண்ணீர் அடித்தார் போல் 24 மணிநேரமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வேதனையிலும் வேதனை.

மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நுகர்வோர்கள் தெரிந்துகொள்ள மின்வாரியத்தை தொடர்புகொள்ள இயலவில்லை என நுகர்வோர்கள் புகார் அளிக்கின்றனர்.

பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்தால் கூட போதையில் இருக்கும் மின்வாரிய ஆசாமிக்கு எவ்வாறு தெரிவிப்பது என ஆவேசப்பட்டார் மின் தடையால் தூக்கமிழந்த நுகர்வோர் ஒருவர்.

தமிழக அரசே மின் வாரிய அதிகாரிகளே மின் விநியோக சாதனங்களில் திடீர் பழுது ஏற்படுவது இயற்கை. ஆனால் நுகர்வோர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை மறவாதீர்.

இனிமேலாவது மரணித்துபோன தரைவழி தொலை பேசிக்கு உயிர் கொடுங்கள். மதுக்கூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட அதிரை அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img