Wednesday, December 3, 2025

அதிரைக்குள் நுழையும் பால்காரர்கள் கோவிட் 19 டெஸ்ட் கட்டாயம் எடுக்க வேண்டும் – ஜமாத் அதிரடி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட ஜமாத்தார்கள், ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளி விட்டு இன்று நடைபெற்றது.

கொரானா நோயை காரணம் காட்டி அதிரையர்கள் வெளியில் செல்லாதவாறு பல கிராமங்களில் அந்தந்த பகுதி பிரதிநிதிகள் தடையை ஏற்படுத்தினர்.

இதனால் கிராமங்களில் தோப்புகள் வைத்திருந்தவர்கள் நிறைய பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தங்கள் பகுதிகளில் தடையை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வரும் பால் காரரர்கள் கொரானா பயத்தால் ஊருக்கு நுழைவதில்லை என்ற தகவல் பரவியது.

இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் கொரானா நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்பும் இந்நேரத்தில் பால் காரர்கள் மீண்டும் ஊருக்கள் சர்வ சாதாரணமாக பால் விநியோகம் செய்து வருகின்றனர்.

முழுமையாக கண்டைன்மண்ட் பகுதியாக உள்ள நமது பகுதிக்குள் வெளியில் இருந்து வரும் வியாபாரிகள் பால் காரர்கள் வரும் 17ஆம் தேதிக்கு பின்னர் கோவிட்-19 டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் உறுதி செய்தபின் ஜமாத்தினரை அனுகி அனுமதி அட்டையுடன் தொடர்ந்து பால் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல பால் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ள நிலையில் நம்மை நாமே தற்காத்து கொள்ள இந்த பரிசோதனை அவசியமாகிறது.

எனவே வெளியூர், கிராமங்களில் இருந்து அதிரைக்குள் வரும் வியாபாரிகள்,பால் காரர்கள் கண்டிப்பாக கோவிட் 19பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று ஜமாத்தில் சமர்பிப்பது கட்டாயம் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பான சிஸ்யா தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img