தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.இதனால் சீரான குடிநீர் பெறுவதிலும் மிக சிரமம் உள்ளது.ரமழான் நேரங்களில் இவ்வாறு இருப்பது மிகுந்த சிரமத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது.விடியற்காலை சஹர் நேரங்களிலும் மாலை நேரங்களிலும் இதுபோன்ற மின்வெட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தயவுசெய்து தாங்கள் சீரான மின்விநியோகம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...






