Saturday, September 13, 2025

எழுத்தாளர் அதிரை அஹமது அவர்களின் மரணம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு ~ PFI மாநில தலைவர் இரங்கல்…

spot_imgspot_imgspot_imgspot_img

சிறந்த எழுத்தாளரும் மிகச்சிறந்த பண்பாளருமான அதிரை அஹமது அவர்களின் மரணச் செய்தி மிக்க வேதனையளிகின்றது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் முதற்கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ் மக்களுக்கு தந்துள்ளார். நபி (ஸல்) வரலாறு, நல்ல தமிழ் எழுதுவோம், அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் ஆகிய நூற்கள் அவர் சிறந்த எழுத்தாளர் என்பதற்கான சாட்சிகளாகும். நபி (ஸல்) வரலாறு எழுதுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 15 வருடங்கள். அதற்காக பல்வேறு புத்தகங்களை வாசித்தும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சென்றும் முழு ஈடுபாடோடு எழுதியிருக்கின்றார் என்பது ஆச்சரியமானது. இலக்கியச்சோலை வெளியீடான அப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பங்கெடுத்து புத்தகத்தை வெளியிடும் பாக்கியம் பெற்றிருந்தேன் என்பதனை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

சில காலம் பாக்கியாத்துஸ் சாலிஹாத் அரபி கல்லூரியில் தமிழ் ஆசிரியாராக சேவையாற்றியுள்ள அதிரை அஹமது அவர்களை தமிழ்மாமணி விருதும் கவுரவிக்க தவரவில்லை. இது அவரின் தமிழ் சேவைக்கு கிடைத்த கௌரவம்.

அவரின் மரணம் உண்மையில் வேதனையளிக்கிறது. அவர்களின் வாழ்வில் ஆற்றிய சேவைகளுக்கு மறுவுலக வாழ்வில் இறைவன் மகத்தான நற்கூலியை வழங்குவானாக. அவரை பொருந்திக் கொள்வானாக. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

M.முகம்மது சேக் அன்சாரி
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img