தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள கோவில் சுவற்றை ஒட்டி அப்படியே வண்டியுடன் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அக்குப்பைகள் இருத்தினங்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் இருந்து அல்லப்படுவதாகவும் , இதனால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி அதிகளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைக்கு வந்தால் நோயை அங்கிருந்தே பெற்றுச்செல்லும் அபாயம் உள்ளதாக அப்பகுதினர் குற்றம் சாற்றியுள்ளனர்.
இக்குப்பையை தினமும் அள்ளி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...






