Saturday, September 13, 2025

பேராவூரணி அருகே சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில்  சேதமடைந்த மண்சாலையை சீரமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியில் செங்கமங்கலம் செல்லும் வழியில் பிரிவு மண்சாலை உள்ளது.  பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில்,  சுமார் 10 அடிக்கு சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த பாதையின் வழி யாகத்தான்.  தற்போது கோடை விவசாயம் செய்து உள்ளனர். அறுவடை காலமாக உள்ளதால், அறுவடை இயந்திரங்க ளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பலவாறு சிரமப்படுகின்றனர்.

எனவே உடனடியாக இந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சன்னாசி கூறுகையில், “மாவடுகுறிச்சியில் இருந்து செங்கமங்கலம் செல்லும் சாலையில்  விவசாய நிலங்களுக்கு செல்லும்  பழையநகரம்  மண்சாலையில்  மிகப்பெரிய பள்ளம் உள்ளது.  இந்த  பாதையின் வழியாக விவசாயிகள் சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது  மண் சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரமுடியாமல் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையர், ஒன்றிய குழு உறுப்பினருக்கு மனு கொடுத்து உள்ளோம். உடனடியாக   நடவடிக்கையும் எடுத்து   மண்பாதையை  சீரமைத்து தர  வேண்டும்” என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img