Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர்  இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி வைத்து பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக  பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தட்டு வண்டியில் இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றிவைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு சக்கர வாகனம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டு வண்டியை சாலையில் ஓட்டிச் சென்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், பண்ணவயல் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா தம்பி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img