Saturday, September 13, 2025

கொரோனா பரவல் காரணமாக ஜூலை 26 வரை கடலுக்கு செல்லவில்லை மல்லிப்பட்டிணம் மீனவர்கள் முடிவு….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு வாரம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மாவட்டத்தின் பல ஊர்களில் வியாபாரிகள், வணிகர்கள் தாமாக முன்வந்து கடைகள் அடைத்தும்,கடை திறப்பு நேரத்தை குறைத்தும் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்க மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் ஜூலை 26ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் செல்ல கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.மேலும் வரக்கூடிய நாட்களில் தொழிலுக்கு போனாலும் முக கவசம்,சமூக இடைவெளி அவசியம் என்பதையும் வலியுறுத்தி பேசப்பட்டது.

இக்கூட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மல்லிப்பட்டிணம் சங்க நிர்வாகிகள் சந்திர சேகர்,வடுகநாதன்,கள்ளிவயல் தோட்டம் நிர்வாகிகள் AK.தாஜுதீன், அப்துர் ரஹ்மான்,செய்யது முகமது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img