Monday, February 2, 2026

பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டிய நடிகர் ரோபோ சங்கர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.

திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அனுமதியோடு, பட்டுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கே நேரில் சென்று அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுடன் சிரித்து பேசியதோடு, பல குரல்களில் பேசியும் மகிழ்வித்தனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன அழுத்தம் குறைந்து இயல்பு நிலையை அடைவதற்கு இது ஒரு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்றும் கூறினார்.

மேலும் உலகமே கொரானா வைரஸை பார்த்து அச்சப்படும் நிலையில் தன்னுடைய மனைவி கொரோனா பாதித்தவர்களை தனிமைப் படுத்தலாமே தவிர அவர்களை ஒதுக்கி வைக்க கூடாது எனவே அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களே சந்தோஷப்படுத்தி வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ரோபோ..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img