Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்???

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் வெளிமாநில மற்றும் பக்கத்து துறைமுகங்கள்,ஊர்களில் இருந்து வரக்கூடிய மீன் லோடு லாரிகள் வண்டியினுள் இருக்கும் கழிவுகளை மல்லிப்பட்டிணம் ECR சாலையில் மக்கள் நடமாடக்கூடிய பகுதிகளில் கொட்டிவிடுகின்றன.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக அந்த வழியை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img