Wednesday, March 18, 2026

நாளை முதல் தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறதா? அதிகாரிகள் விளக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். இதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்க மற்றும் பிற வங்கி சேவைகள் கிடைக்காமல் திண்டாடினர்.

நாளை முதல் தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறதா? அதிகாரிகள் விளக்கம்!தற்போது மீண்டும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை உள்ள 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். இதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்க மற்றும் பிற வங்கி சேவைகள் கிடைக்காமல் திண்டாடினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை உள்ள 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த தகவலின்படி, மார்ச் 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29ம் தேதி ஹோலி பண்டிகை, 31ம் தேதி ஆண்டு கணக்கு முடிக்க இறுதி நாள், ஏப்ரல் 1ம் தேதி நிதியாண்டில் முதல் நாள், ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே விடுமுறை என செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கிய வங்கி அதிகாரிகள், வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கிய அவர்கள், மார்ச் மாதம் 27ம் தேதி கடைசி சனிக்கிழமை, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. ஆனால் மார்ச் 29 ஹோலி பண்டிகை, இதற்கு தமிழகத்திற்கு விடுமுறை இல்லை வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை, இதேபோல மார்ச் 30 அன்று பாட்னாவில் மட்டும் வங்கி சேவைகள் மூடப்படும்.

மார்ச் 31ம் தேதி நிதியாண்டு முடிவு அன்று விடுமுறை விடப்படும். அதேபோல ஏப்ரல் 1, 2 வங்கி முழுவருட கணக்கு முடிவு மற்றும் புனித வெள்ளிக்கு விடுமுறை விடப்படும். ஆனால் அதற்கு மறுநாள் ஏப்ரல் 3ம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும், ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை என தகவல் அளித்துள்ளனர்.

வங்கி தொடர்பான சேவைகளை பெற நீங்கள் திட்டமிட்டிருந்தால், விடுமுறை நாட்களின் பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.,

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img