Sunday, February 1, 2026

இப்படி ஒரு இளைஞரா ? பட்டுக்கோட்டையை கலக்கும் சிவா!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தனது ஓட்டலில் தயார் செய்யப்படும் இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கவலையில் உள்ளனர்.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் 14 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் ஹோட்டல் நடத்திவரும் சிவா என்ற இளைஞர் தன்னால் முடிந்த அளவு காலையில் மட்டும் தினசரி சுமார் 200 பேருக்கு இட்லி, இடியாப்பம், தோசை உள்ளிட்டவைகளை பார்சலாக கட்டி இலவசமாக வழங்கி வருகிறார்.இது குறித்து ஹோட்டல் முதலாளி சிவா கூறுகையில், சென்ற கொரோனா முதல் அலையின்போது என்னால் முடிந்தளவு மூலிகை சூப் வழங்கினேன். எனக்கு ஹோட்டல் நடத்துவதில் சில நடைமுறை சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது.சிரமங்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த அளவிற்கு இட்லி, இடியாப்பம், தோசை உள்ளிட்டவைகளை தினசரி 200 பேருக்கு பார்சலாக வழங்கி வருகிறேன். லாக்டவுன் முடியும்வரை இலவசமாக உணவு வழங்க உள்ளேன் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img