Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் சரபென்றராஜன்பட்டினம் ஊராட்சியின் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் கால இரண்டாம் கட்ட நிவாரணத்தொகை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாய் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் முதற்கட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் ஜூன் 15 முதல் வழங்கப்பட்டு வருகிறது, இதோடு 14 வகையான நிவாரணப் பொருட்கள் சேர்த்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் நியாய விலை கடையில் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாவது வார்டு பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img