ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருமங்கலக்கோட்டை மேற்கு கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஜெயம்(வயது73). கடந்த 10-ந்தேதி ஜெயம் பக்கத்து வீட்டுக்கு சென்ற போது இவரது வீட்டுக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம ஆசாமி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கோபிசரன் (28) ஜெயம் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளியூரில் பதுங்கி இருந்த கோபிசரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள கோபிசரன் மீது பல போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





