21 வார்டுகளை கொண்டு பழம்பெரும் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்துவந்த அதிரையை நகராட்சியாக தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிரை மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. இந்நிலையில், அதிரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டாலும் தற்போதைக்கு சொத்து வரி உள்ளிட்ட இதர வருவாய்க்கான வரி உயர்த்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுற்றுவட்டார ஊராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகள் இருப்பதால் அதிரை நகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கும் குறுகிய காலம் வாய்ப்பில்லை. இதனிடையே அதிரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதால் உள்ளூர் உடன்பிறப்புகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





