Sunday, February 1, 2026

அதிரை உமர் தம்பி பெயரில் விருது வழங்க வேண்டும்! மாநிலங்களவை உறுப்பினரிடம் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று (14-11-2021) தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த உத்தம திருநபியின் சீறத் விழாவிற்கு வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் உயர் திரு. எம்.எம். அப்துல்லாஹ் அவர்களிடம், தமிழ் கணிமைக் கொடையாளி அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் தமிழ்க் கணிமையில் பங்காற்றியோருக்கு அல்லது அறிவியல் பங்களிப்பில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணமுடிச்சுடன் கூடிய விருதை தமிழக அரசு வழங்க வேண்டி சமூக ஆர்வலரும் தமிழ் விக்கிபிடியா நிர்வாகியுமான மாகிர் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2010 சூன் 23ஆம் தேதி கோவை கொடிசியா அரங்கில் நடந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடத்தியது. அதில் யுனிகோட் தமிழ்கணிமைக்கு பெரும் பங்காற்றிய தமிழ்க் கணிமைக் கொடையாளி மறைந்த அதிரை உமர் தம்பி அவர்களின் பெயரில் அரங்கு ஒன்றிற்கு ‘உமர்தம்பி’ என பெயரிட்டு உத்தமமும், தமிழக அரசும் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img