Saturday, September 13, 2025

அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !

spot_imgspot_imgspot_imgspot_img

தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !!

தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை.

இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம் நடத்தும் அவலம் நீடிக்கிறது.

நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு பரவும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தேங்காய் ஓடு,டயர் போன்றவற்றில் நீர் தேங்கி இருக்கிறதா என ஆய்வு செய்யும் அதிகாரிகளின் கண்ணில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மட்டும் புலப்படவில்லை.

இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நகரெங்கும் பரவி மக்களை கடித்து துவம்சம் செய்து வருகிறது.

இதனால் நகரில் பலருக்கும் டெங்கு பரவி வருகிறது.

பச்சிளம் சிறார்களையும் விட்டுவைக்காத கொசுக்களால் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொசுக்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு டெங்கு நோய் பரவும் சூழல் உருவாகி இருப்பதால் கொசுக்களை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img