Sunday, February 1, 2026

அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !

spot_imgspot_imgspot_imgspot_img

தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !!

தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை.

இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம் நடத்தும் அவலம் நீடிக்கிறது.

நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு பரவும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தேங்காய் ஓடு,டயர் போன்றவற்றில் நீர் தேங்கி இருக்கிறதா என ஆய்வு செய்யும் அதிகாரிகளின் கண்ணில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மட்டும் புலப்படவில்லை.

இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நகரெங்கும் பரவி மக்களை கடித்து துவம்சம் செய்து வருகிறது.

இதனால் நகரில் பலருக்கும் டெங்கு பரவி வருகிறது.

பச்சிளம் சிறார்களையும் விட்டுவைக்காத கொசுக்களால் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொசுக்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு டெங்கு நோய் பரவும் சூழல் உருவாகி இருப்பதால் கொசுக்களை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img