Saturday, September 13, 2025

ஒமிக்ரான் : புதிய கட்டுப்பாடுகள்- ஊரடங்கு அமல் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது

இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணிவரை அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை என அதில் குறிப்பிட்டு உள்ளது.

மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறரர்.

பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து என முதல்வர் கூறியுள்ளார்

10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்

ஞாயிற்றுக் கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.

ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய இ பாஸ் அமல் படுத்தப்படும் என அரசு கூறியுள்ள புதிய வழிகாட்டு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img