Wednesday, March 18, 2026

இந்திய தலைவர்கள் முஸ்லீம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் – மலாலா கருத்து!

spot_imgspot_imgspot_imgspot_img







மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் திடீரென மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து ஹிந்து மாணவர்கள் காவி உடை அணிந்து வந்தார்கள் என்பதும் தலித் மாணவர்கள் நீல உடை அணிந்து வந்தார்கள் என்பதால் இந்த பிரச்சனை பெரிதாகியது.

இந்த பிரச்சனை குறித்து அனைத்து ஊடகங்களிலும் விவாதம் செய்யப்பட்டது என்பதும் மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இது குறித்து தனது கருத்தை தெரிவித்த போது பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார.

மேலும் பெண்கள் உடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பெண்களின் ஆடை குறைந்தாலும், கூடினாலும் அது பிரச்சனையாகி விடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ள வேண்டாம் என்று இந்திய தலைவர்களுக்கு கேட்டுக் கொள்வதாகவும் மலாலா தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img